வடக்கு மற்றும் தெற்கு பீகாரை இணைக்கும் ககாரியாவில் உள்ள அகுவானியிலிருந்து சுல்தாங்கஞ்ச் வரையிலான 3 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் கட்டப்பட்டு வருகிறது. எஸ்பி சிங்லா நிறுவனம் 1711 கோடி செலவில் பாலத்தை கட்டி வருகிறது. பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதோடு, இதற்கு காரணமானவர்களை அடையாளம் காணவும் உத்தரவிட்டார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கனவு திட்டத்தில் இந்த பாலம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.