பெங்களூரு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பழிவாங்கும் அரசியலை விரும்பவில்லை: துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உறுதி

பெங்களூரு: எனக்கு பழிவாங்கும் அரசியல் அவசியமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதாவில் பெங்களூரு மாநகரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் டி.கே.சிவகுமார் பேசும்போது, நாம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். பெங்களூரு மாநகரை சர்வதேச அளவில் மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நமது இலக்காக உள்ளது. நாம் அரசியலை விட்டு விட்டு மாநகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனக்கு பழிவாங்கும் அரசியல் அவசியமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் என்னிடம் மோத யார் விரும்பினாலும் சந்திக்க தயாராக இருப்பேன் அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்காமல், பெங்களூரு வளர்ச்சிக்கு நாம் அனைவரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

Related posts

இன்று (5ம்தேதி) உலக சிரிப்பு தினம்; ஆழ்ந்த சிரிப்பு மன அழுத்தத்தை தவிர்க்கும் கவலை, உடல் வலியையும் குறைக்கிறதாம்…விழிப்புணர்வு நாளையொட்டி உளவியல் ஆய்வாளர்கள் தகவல்

கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது!