ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய கோரி உருவப்படத்தை எரித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

பெங்களூரு: கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வால் ரேவண்ணா உதவி கேட்டு வந்த பெண்கள் பலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக புகார் எழுந்த நிலையில் அவை தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது கர்நாடக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

எனவே அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர், மகளிர் அமைப்பினரும் பிரஜ்வால் ரேவண்ணாவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். புகாரின் பேரில் பிரஜ்வால் ரேவண்ணா மீது நரசிபூர் காவல்நிலையத்தில் 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரஜ்வால் தமது புகழை கெடுக்கும் நோக்கில் மார்பிங் செய்து வீடியோ பரப்பப்படுவதாகும் கூறியுள்ளார்.

Related posts

ஆன்லைன் சூதாட்டத்தில் 6 மாதங்களில் 8 உயி்ர்கள் பலி.. தமிழக அரசு நடவடிக்கை எடுத்திடுக : ராமதாஸ் வலியுறுத்தல்

இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து ரூ.34,000 கோடி கடன் பெற்ற வழக்கில் தீரஜ் வாத்வான் அதிரடி கைது..!!

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச பாட புத்தகம் அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம்