எனவே அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர், மகளிர் அமைப்பினரும் பிரஜ்வால் ரேவண்ணாவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். புகாரின் பேரில் பிரஜ்வால் ரேவண்ணா மீது நரசிபூர் காவல்நிலையத்தில் 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரஜ்வால் தமது புகழை கெடுக்கும் நோக்கில் மார்பிங் செய்து வீடியோ பரப்பப்படுவதாகும் கூறியுள்ளார்.