இந்த நிலையில் கூடுதலாக ரூ.19.58 கோடி கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து கார்ப்பரேட் வரி வசூல் அதிகரித்ததே ஒட்டுமொத்த வருவாய் அதிகரிக்க காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மறைமுக வரி வசூலும் எதிர்பார்ப்புகளை தாண்டி ரூ.14.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.