அமெரிக்காவில் ஆந்திர மாணவர் கொலை: சக மாணவர்கள் வெறிச்செயல்

விஜயவாடா: அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திர மாணவரை, சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பருச்சுரி அபிஜித் (20), அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவர்களுடன் பருச்சுரி அபிஜித்துக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அபிஜித்திடம் இருந்த பணம் மற்றும் மடிக்கணினியை பறித்துக் கொண்ட கும்பல், அவரை அடித்துக் கொன்றது. பின்னர். காரில் அவரது உடலை எடுத்து போட்டுக் கொண்டு சென்றது.

ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் அபிஜித்தின் உடலை வீசிவிட்டு சென்றது. தகவலறிந்த போலீசார், அபிஜித்தின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைகள் முடிந்த நிலையில், தற்போது குண்டூர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு அபிஜித்தின் உடல் கொண்டு வரப்பட்டது. மாணவரின் தந்தை பருச்சுரி சக்ரதர் மற்றும் தாய் ஸ்ரீலட்சுமி ஆகியோர், தங்களது ஒரே மகன் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டதை நினைத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related posts

நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு

கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்