நடிகர் சல்மானின் சகோதரி வீட்டில் திருட்டு: வீட்டு வேலையாள் கைது

மும்பை: நடிகர் சல்மான் கானின் சகோதரி அர்பிதா கானின் வீட்டில் வைர நகைகளை திருடிய வீட்டு உதவியாளரை மும்பை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரி அர்பிதா கான் வசித்து வருகிறார். அவரது வீட்டில் விலே பார்லே பகுதியைச் சேர்ந்த சந்தீப் ஹெட்ஜ் (30) என்பவர் வேலையாளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அர்பிதா கானின் வீட்டில், திடீரென 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மாயமானது. இதுதொடர்பாக கர் காவல் நிலையத்தில் அர்பிதா கான் புகார் அளித்தார்.

போலீசாரின் தொடர் விசாரணையில், வைர நகைகளை திருடியது சந்தீப் ஹெட்ஜ் என்பது தெரியவந்தது. அதையடுத்து சந்தீப் ஹெட்ஜை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அவர் தான் வைர நகைகளை திருடியதாக ஒப்புக் கொண்டார். அதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 381 இன் கீழ் சந்தீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சந்தீப்பின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வைர நகைகளை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்