டெல்லி: டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை; கொலையாளியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.