டெல்லி: 2025-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சுகன்யான் திட்டம் குறித்த பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்துக்கு முன்னோடியாக 20 வகையான முக்கிய பரிசோதனைகள் நடத்தப்படும். 3 முறை ஆளில்லாமல் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.