2022ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமை பணி தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின; முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்து சாதனை..!!

சென்னை: 2022-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். யு.பி.எஸ்.சி. இறுதித் தேர்வில் முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். யுபிஎஸ்சி இறுதித் தேர்வில் இஷிதா கிஷோர் முதலிடம், கரிமா லோஹியா 2-வது இடம், உமா ஹராதி 3-வது இடம் பிடித்தனர். புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் சரவணன், 147-வது இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த மதிவதனி இராவணன் 447-வது இடம் பிடித்து யு.பி.எஸ்.சி. தேர்ச்சி பெற்றுள்ளார்.

Related posts

வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு!

சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்

சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு