மானூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பெண்ணால் பரபரப்பு

மானூர், மார்ச் 28: மானூர் அருகேயுள்ள திருமலாபுரத்தில் பெண் ஒருவர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மானூர் அருகேயுள்ள திருமலாபுரம் கிராமத்தில் நேற்று மாலை 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் கிராமத்தினர் குவிந்தனர். ஏற்கனவே பிள்ளைகளை கடத்தும் கும்பல் நடமாடுவதாக தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கிராமத்தினர் மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று, அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர் பேசும் மொழி புரியாததாலும்,  அவரின் நடவடிக்கையை பார்த்ததும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மானூர் காவல் நிலையத்தில் கிராமத்தினர் குவிந்ததால்

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்