சேரன்மகாதேவியில் வாலிபரை தாக்கியவர் கைது

நெல்லை, மார்ச் 28: சேரன்மகாதேவி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (40). இவர், கடந்த 21ம் தேதி சேரன்மகாதேவி காந்தி பார்க் அருகே உள்ள ஏடிஎம்யில் பணம் எடுத்து விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சேரன்மகாதேவி பொழிக்கரையை சேர்ந்த மாசானமுத்து (31) ரோட்டின் குறுக்கே நடந்து வந்துள்ளார்.

இதனை பார்த்த சரவணன் மாசானமுத்துவிடம் ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாசானமுத்து அவரை அவதூறாக பேசி, தாக்கி மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து சரவணன் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்ஐ சிவா மற்றும் போலீசார் ஆகியோர் வழக்கு பதிந்து மாசானமுத்துவை கைது செய்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்