ஜீரோவும் ஜீரோவும் இணைந்தால் ஜீரோ வருவதுபோல்தான் ஒபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு உள்ளது: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..!!

சென்னை: டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் இணைந்தது மாயமான், மண் குதிரை ஒன்று சேர்ந்தது போல் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டி.டி.வி.தினகரன் கூடாரம் ஏற்கனவே காலியாகிவிட்டது. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்தது போல் ஓ.பி.எஸ். புகுந்துள்ளார். ஜீரோவும் ஜீரோவும் இணைந்தால் ஜீரோ வருவதுபோல்தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு உள்ளது என்றார்.

ஓபிஎஸ் உடன் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் எங்கே எனவும் பழனிசாமி கேள்வி எழுப்பினார். பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. கிளைச் செயலாளருக்கு உள்ள தகுதிகூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் செல்லும் கட்சி அதோடு முடிந்து விடும். பண்ருட்டி ராமச்சந்திரன் நிழல் கூட அவர்கூட வரவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் எத்தனை கட்சிக்கு சென்றார் என்று மக்களுக்கு தெரியும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வேட்புமனுவில் சொத்துமதிப்பை தவறாக காட்டிய புகாரில் வழக்குப்பதிவு குறித்த கேள்விக்கு, 1989ம் ஆண்டுக்கு பிறகு என் மீது எந்த சொத்தும் கிடையாது; நான் சொத்துக்கள் வாங்கியதே கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Related posts

பதவியை பிடிக்க கிடா விருந்து வைத்த தாமரை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு