சென்னை : முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்த பின் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.