சில வீடுகளில் சோதனையிட்டதில் கொக்கெய்ன், மெபெட்ரோன், கீட்டாமைன் ஆகிய போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை பதுக்கிய போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என்று தெரிய வந்தது.