மாநிலத்தை துண்டாடுவது மற்றும் அதன் அந்தஸ்தை 2 யூனியன் பிரதேசங்களாகக் குறைப்பது பற்றிய கேள்வி குறித்து மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றம் முடிவு செய்யாததைக் கண்டு நாங்கள் ஏமாற்றமடைகிறோம். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறியதில் இருந்து முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க INC எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். லடாக் மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். சட்டசபை தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம்.
எவ்வாறாயினும், தேர்தலை உடனடியாக நடத்தப் படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜம்மு காஷ்மீர் நம்முடன் இணைந்ததில் இருந்து, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் மக்கள் இந்திய குடிமக்கள். ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவதற்கான எங்கள் உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம் இவ்வாறு கூறினார்.