மேற்கு வங்க மாநில தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா, “ரயில் விபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து மட்டும் 61 பேர் பலியாகி உள்ளனர். 182 பேர் காணாமல் போயுள்ளனர். அப்படியானால், மொத்த பலி எண்ணிக்கை எங்கோ சென்று விடும்? அதிகாரப்பூர்வமாக இறந்தவர்கள் எண்ணிக்கை எத்தனை?,” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.