இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்தனர். மேலும், போதிய மழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டியுள்ளனர். மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பெண் கிடைக்க வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன் மாதேஸ்வரன் கோயிலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.