நெல்லையில் நேற்றும் பகலில் வழக்கம் போல் வெப்பம் தகித்தது. பிற்பகல் 2.30 மணிக்கு மேல் லேசான குளிர்ந்த காற்று வீசியது. மாலை 3 மணிக்கு பின்னர் பலத்த இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, புதிய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், தச்சநல்லூர், தியாகராஜநகர், நெல்லை டவுன், சீதபற்பநல்லூர், முக்கூடல், மானூர், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நாங்குநேரியில் 4 மிமீ, பாளையங்கோட்டையில் 12 மிமீ, நெல்லையில் 18 மிமீ மழை பதிவானது. மழை காரணமாக நெல்ைல வண்ணார்பேட்ைட, பாளை. மார்க்கெட், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக நெல்லை வண்ணார்பேட்டை முதல் முருகன்குறிச்சி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் ேநற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. திடீர் கோடை மழையால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.