தேனி: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவிட்டார். தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி இன்று முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும். நீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.