சென்னை: வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மாநகராட்சி பள்ளி 150-வது பூத்தில் EVM-ல் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக புகார் அளித்துள்ளனர். வாக்கு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக திமுக, அதிமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது. வாக்கு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.