நாட்டின் பிரதமர் ஒருவர் (மோடி) தனது முழு நேரத்தையும் கோயில்களில் செலவிடுவது கவலையளிக்கிறது. அவர் பள்ளிகள், நூலகங்கள், அறிவியல் நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கேள்விகளை, காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தல் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, ராகுல் காந்தியிடம் பேசியுள்ளேன். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம்.
இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமாகிவிட்டதை பார்க்க முடிகிறது. நாட்டின் பிரதமர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் பிரதமர் பதவிக்கு திறமையான பலர் உள்ளனர். சிலர் கண்ணுக்குத் தெரிகிறார்கள், சிலர் இன்னும் தெரியவில்லை. ராகுல் காந்தி சிறந்த அறிவாளி; கட்சியை திறம்பட வழிநடத்தும் திறன் கொண்டவர்’ என்றார்.