டெல்லி: நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன் இதுவரை இல்லாத அளவில் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின்போது ரூ.3,475 கோடி பறிமுதலான நிலையில் தற்போது ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.