இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு துறை உறவில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான சீன தூதர் ஜா லியு கூறுகையில், ‘இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தற்போது சரியான பாதியில் செல்கிறது.
இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உலக அமைதி, வளர்ச்சி, தொலைநோக்கு பார்வையுடன் பிரச்னைகளை அணுகுவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து சீன தூதரகத்திடம் பேசி வருகிறேன்’ என்றார்.