விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கட்டாயத்தேவன்பட்டியில் மயானம் அமைப்பதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மயானம் அமைக்கப்படும் இடத்தில் பேருந்து நிறுத்தம், கோயில் இருப்பதால் இடத்தை மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி வத்திராயிருப்பு பி.டி.ஒ. அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.