மதுரை: விருதுநகர் கலசலிங்கம் ஆனந்தம்மாள் தொண்டு நிறுவனங்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து தொண்டு நிறுவனம் கட்டடம் கட்டியுள்ளது என்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு தெரிவித்தது. மனுதாரரே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற வேண்டும்; அதற்கு 6 மாதங்களுக்கு மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்குகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.