இந்நிலையில் இருசக்கர வாகனம் இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலை எனும் இடத்தின் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. பலத்த காயமடைந்த இருவரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.