விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை வெளியிட அனுமதி: ஐகோர்ட் உத்தரவு..!!

 

சென்னை: விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் -2 திரைப்படத்தை வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிச்சைக்காரன்-2 படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் தங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கனவே ஆய்வுகூடம் என்ற பெயரில் படத்தை தயாரித்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது, அந்த கதையின் அடிப்படையில் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன்-2 காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தடை கோரியிருந்தார் ராஜ கணபதி

எனவே நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்திருந்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி ஆய்வுகூடம் படம் குறித்து தமக்கு எந்த தகவலும் தெரியாது என்றும், அந்த படத்தை பார்த்தது இல்லை என்று கூறினார். வழக்கு தொடங்கப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் -2 படத்திற்கும் ஆய்வுகூடம் படத்திற்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்தார். படத்தின் தேதி தள்ளிப்போனதால் தனக்கு பொருளாதாரரீதியாக இழப்பு ,மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி பதில் மனு அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சௌந்தர் பிறப்பித்த உத்தரவில் பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளார். அதே வேளையில் படத்தை வெளியிடுவது மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன்-2 திரைப்படம் மே 19ல் வெளியாகிறது.

Related posts

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்: போலீஸ் விசாரணை