விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஜெகன்மோகன் பணியாற்றுவார்: ஆந்திரா அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளியில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதன்பிறகு மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் நிருபர்களிடம் கூறியதாவது, “அக்டோபர் 23ம் தேதி விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் பணியாற்றுவார். இன்று (நாளை) முதல் சட்டப்பேரவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளுக்காக ஒரு குழுவை அமைக்க முதல்வர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திராவில் கால அட்டவணைப்படி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்