வேலூர்: வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூறைக்காற்றால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.