கடும் பனிப்பொழிவு கனமழை காரணமாக கேதர்நாத் யாத்திரைக்கு அனுமதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானிலை சீரடைந்ததால் திட்டமிட்டபடி கேதார்நாத் யாத்திரை பாதை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மேளம் அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். கேதர்நாத் சிவன் தளம் 3,583மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெண்பனிக்கு மத்தியில் மலைப்பாதையை கடந்து சென்று பக்தர்கள் வழிபாடு வருகின்றனர். கோயில் நடை நவம்பர் 23ம் தேதி மூடப்படும்.