சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக பாலமுருகன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாக உள்ளதுடன் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பும் மறுக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.