லக்னோ: உத்தரபிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 11ம் தேதி ஆய்வு அதிகாரிகள், உதவி ஆய்வு அலுவலர்களுக்கான தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அரசுக்கு அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தேர்வை ரத்து செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.