மார்ச் மாதம் தொடங்கி 3 நாட்கள் ஆன பிறகும் சம்பளம் கிடைக்காததால் இன்று முதல் போராட்டம் நடத்த தலைமைச் செயலக ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். ஒன்றிய அரசிடமிருந்து உடனடியாக வர வேண்டிய ₹4600 கோடி கிடைக்காததால் கேரளா அரசின் நிதி நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இந்த நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கூறி ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.