அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர், அந்த இளம்பெண்ணிடம் சென்று, ‘’தன்னை மாமா’’ என்று கூப்பிட வேண்டும் என்று கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண், அவரிடம் இருந்து விலகி வேகமாக செல்ல முயன்றபோது பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொடுங்கையூர் விவேகானந்தர் நகர் அப்பர் தெருவை சேர்ந்த மிர்தெஞ்சன் (எ) மாதேஷ் (23) என்பவரை கைது செய்தனர்.
இதன்பின்னர் அவரை எம்கேவி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் மாதேஷ் பணியாற்றி வருகின்றார் என்பது தெரிந்தது. இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.