ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்

*திருச்சி ஏர்போட்டில் சிக்கியது

திருச்சி : மலேசியாவில் இருந்து ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி ஏர்போட்டில் சிக்கியது. இது தொடர்பாக பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் எடுத்து வந்த 3 ட்ராலி பேக்குகளில் தங்கம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், ட்ராலி பேக் வீல்களில் தங்கத்தை ஸ்குரூக்களாக பயன்படுத்தி கடத்தி வந்ததும், பேக் வீல்களில் இருந்த ஸ்குரூக்களில் 235 கிராம் தங்கம் இருந்தது என உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.16.17 லட்சமாகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து

அதானி நிறுவன நிலக்கரி ஊழல் பற்றி விசாரணை: ராகுல் காந்தி