விழாவின் முக்கிய நிகழ்வான தங்கைக்கு அண்ணன் கிளி பிடித்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தங்கை விளையாட மரத்தில் ஏறி அண்ணன் கிளி பிடித்து வந்து கொடுத்தார். வரலாற்றை நினைவுப்படுத்தும் ஐதீக நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.