சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் 6 வாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பேருந்து பயணியை டிக்கெட் பரிசோதகர் தாக்கிய விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.