மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தபோது அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு பைக் மீது சாய்ந்தது. இதில் தம்பதி இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். இதைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து தம்பதியை மீட்க முயன்றனர். ஆனால் மரக்கிளை ராட்ச அளவில் இருந்ததால் அதனை உடனடியாக அகற்றி தம்பதியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி தம்பதியை மீட்டனர். ஆனால் அதற்குள் ரவீந்தர் இறந்தது தெரியவந்தது. சரளாதேவி படுகாயமடைந்தார். அவரை அதே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த பொல்லாரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.