தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் நாளை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி. மெயின் அருவியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.