திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்தார். அதம்பார் ஒத்தவீடு கிராமத்தில் ராஜசேகர் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மகள் மோனிஷா (9) பலியானார் மற்றும் மகன் மோகன்தாஸ் (12) படுகாயம் அடைந்துள்ளார்.