திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தனது பணியை முறையாக செய்யாததால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.