திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது

*உடந்தையாக இருந்த மனைவியும் கைதானார்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த முருக்கேரி அருகே 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 60 வயது முதியவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த முருக்கேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. கடந்த 19ம் தேதி மதியம் 1 மணியளவில் இவரை, இவரது பெற்றோர் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு அனுப்பியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (60) என்பவர் சிறுமியை இழுத்து சென்று தகாத முறையில் முத்தமிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்ட போது அந்த நபர் இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் நடந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து சண்முகத்தின் மனைவி சாவித்திரியிடம் (54) முறையிட்ட போது சண்முகமும், அவரது மனைவியும் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சண்முகம் மற்றும் அவரது மனைவி சாவித்திரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், இருவரும் தவறை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!