ஆனால், அது கேட்டில் பட்டு வெடிக்காமல் விழுந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் தப்பியோடினார். ஆனால், அவரை விரட்டிச் சென்ற கும்பல் சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டு தப்பியது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் வந்து வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கடந்த 2017ல் சங்கரப்பேரியைச் சேர்ந்த சக்திவேலின் உறவினரான அங்குசாமி 5 பேரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் கருப்பசாமி (எ) கருப்பு 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பெரிய ரவுடியாக உலா வந்துள்ளார். அவர் மீது கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் கடந்த ஜனவரி 28ம் தேதி பழிக்குப்பழியாக கருப்பசாமி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி சிறை சென்ற சக்திவேல், 40வது நாளிலேயே ஜாமீனில் வெளிவந்தார். இதனால் தீராத ஆத்திரத்திற்கு ஆளான கருப்பசாமியின் நண்பர்களும், உறவினர்களும் சக்திவேலை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.