இதனால் சுதாரிக்கொண்ட வாலிபர் பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு மதில்சுவர்மீது எகிறிகுதித்து தப்பியுள்ளார்.இதுகுறித்து ராமசுப்பிரமணியன் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பீரோ லாக்கரை உடைத்து 18 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
மேலும் ராமசுப்பிரமணியனின் பக்கத்து வீடு வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டு மதில்சுவர் வழியாக வாலிபர் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிவிட்டு மறுபடியும் தப்பிசெல்லும் காட்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.