ஒவ்வொரு நொடியும் நாடாளுமன்றத்தை செயல்படாமல் இடையூறு ஏற்படுத்தி முடக்குவதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. இதற்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுக்கின்றனர்.ஒரு குறிப்பிட்ட நாளில் நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படும்போது, கேள்வி நேரம் நடக்காது. கேள்வி நேரம் என்பது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கான ஒரு செயல் முறை. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நன்மை கிடைக்கும். கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக செயல்முறையின் இயல்பான பகுதியாகும். ஆனால் கருத்து வேறுபாட்டை பகைமையாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு சாபக்கேடு. எதிர்ப்பு என்பது பழிவாங்கல் ஆக மாறிவிடக் கூடாது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என்றார்.