தேனி: சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. மரம் முறிந்து விழுந்து சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்ததால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அருவியில் மரக்கிளைகளை வெட்டி, புதர்களை அப்புறப்படுத்தியதையடுத்து தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.