மதுரை :தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் சொத்துகளை மீட்டு பராமரிக்கக்கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான 700 பனை மரங்களையும் தற்போது காணவில்லை என்றும் கோயில் நிலங்களை மீட்கக்கோரி முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார்.