அனால் மேட்ரிமோனி தளத்தில் தான் பதிவு செய்யவில்லை என்றும் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி வேறுயாரோ பதிவு செய்து வைத்திருப்பதாகவும் பிரணவ் மறுத்துள்ளார். ஆனால் மேவெண்டும் பிரணவ்விடம் மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திரிஷா வற்புறுத்தியுள்ளார். திருமணத்துக்கு பிரணவ் மறுப்பு தெரிவிக்கவே திரிஷா அவரை கடத்தி தனி அறையில் அடைத்து வைத்துள்ளார்.
அங்கிருந்து தப்பி வந்து போலீசில் பிரணவ் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில் பணம் சம்பாதிக்க சில மோசடி பேர் வழிகள் பிரணவ் பெயரில் போலி ஐ.டி உருவாக்கி இருப்sபது தெரியவந்தது. ஆனால் திரிஷா அதை பிரணவ்வின் உண்மையான விவரங்கள் என்று நம்பி அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். இதை அடுத்து போலீசார் திரிஷாவை கைது செய்து கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.