இன்ஸ்டாகிராம் மோகம் சிற்றோடையில் குதித்த வாலிபர் சடலமாக மீட்பு

டோம்பிவலி: டோம்பிவலி காமத்கர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அசோக் மோர்யா(25). இவர், இன்ஸ்டாகிராமில் பதிவிட ரீல்ஸ் எடுக்க தனது நண்பருடன் டோம்பிவலி மேற்கு மன்கோலி மேம்பாலத்திற்கு வந்திருந்தார். வீடியோ பதிவின் போது, மேம்பாலத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அசோக் சிற்றோடையில் குதித்தார்.

இதைப்பார்த்து அவரது நண்பர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து மீட்பு குழுவினரின் உதவியுடன், வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதன்பேரில், 2 நாட்களுக்கு பிறகு அசோக் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு