சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துப்போயினர். சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. நடப்பாண்டில் சென்னை மீனம்பாக்கத்தில் முதன்முறையாக அதிகபட்ச வெயில் பதிவானது. வேலூர் -107, மதுரை 105, தருமபுரி 104, கோவை 104, திருச்சி 106, பாளையங்கோட்டை 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.